Thursday, 3 October 2013

                    அன்னைக்கு

அகிலம்    போற்றும்
அன்னையாய்    நீ
இப்பிரபஞ்சத்தில் அறிமுகம்
செய்தாயே
உன் குறிதியால்
எம்மை .....

எத்தனை  எத்தனை
எதிர்  பார்ப்புகள்
என்மேல்
உமக்கு......

ஊற்றாய்  பொங்கும்
உன்
அன்பிற்கு
நிகரானவை
எவை
இப்பிறபஞ்சத்தில்
நன்மை  தீமையென
கற்றுக் கொடுத்ததே
உம்  சொல் வளம்
எனக்கு........

மழலைப்  பருவத்தில்
நிலாவினைக்காட்டி
நித்தம்  நித்தம்
நிலாச்  சோறு
எனக்கு......
நீவீர்  உண்டிரோ ?

ஆலமரவிழுது  போல்
உம்னில்
தோற்றுவிக்கப்பட்டவன்
நான்
நாளும்  ஊட்டி
வளர்த்தாயே
தமிழ் பண்பாட்டினை
எமக்கு....
ஞாலம்
போற்றிடுமே   வியந்து
அது    கண்டு
உம்மை ......

ஈன்றெடுத்தாயே
உம்  மரணத்தையும்
எதிர்  பார்த்து
எம்மை ....
உன்மையில்
நீவீர்   மனிதகுலம்    தானோ ?
உம்மையே
அர்பணித்தாயே
எம்
மழலை  பருவத்திற்கு ......

ஐயங்களை
கதையாய்
வார்தெடுப்பாயே  எமக்கு
ஆறாம் அறிவினை
பகுத்தாயே
பன்முகமாய்
எமக்கு .......

'' அம்மா '' என்ற  கவிதைக்கு
அகராதியை
புரட்டினேன்
நான்
அகிலமே அம்மா !
என்றது   அகாரதி !
இல்லை
உமக்கு
நிகரில்லை
இவ்வுலகம்
என்றேன்
நான் ......

ஓயாமல்  ஓடுகின்ற
நதியினை  உற்றுநோக்கு
வாழ்வாதார  நிலையை
கற்றுக்கொள்வாய்

என்றாயே ..........
ஒற்றைக்கொடியில்
உயிர்  கொடுத்தாயே
எமக்கு.......

ஏற்றத்தாழ்வுகளை
கொள்ளாதே   உம்மில்
என்றாயே .....
எல்லாம்
நம்   இனம்
என்ற
பொருட்டாய்

தோல்வியே
உம்  வெற்றி
என்றாயே
வலியில்   வலிமை
பெறத்தானா ....?
வாழ்வின்
இலக்கணங்களை
அன்பால்  பொழிந்தாயே
ஆறாம் அறிவின்
இலக்கணத்தை  தெளிவுறக்
கற்றேன்
உம்மிடம்    நான்  ......

எண்ணங்கள்
யாவும்    நீ
கொள்ளும்  வடிவம்
என்றாயே ...
இவ்வுலகம்
நிலையானதல்ல
என்பதற்காகவா... ?

ஒருவகையில்
உலகிலுள்ள
எல்லா  ம ( மா ) க்களும்
கடனாளிகளே !!!
ஆம்
உம்மிடம்
பெற்ற  உயர்ந்த
அன்பைத்தான் ......
வட்டியை  மட்டும்
செலுத்தி  வருகிறேன்
நான்
பெரும்  கடனில்
மூழ்கவிட்டிரே
எம்மை ......
அசல்
முழுவதும்  செலுத்த
ஓரு ஜென்மம்
போதாதம்மா
எமக்கு ......

தொப்புல்  கொடியால்
தோற்றுவித்து
தொல்லைகள்  தொலைந்தன
என
இல்லாமல்
தொலைதூர  வாழ்விற்கு .....
தோனியாய்  நின்றாயே
உயிர்
கொடுத்த   உமக்கு
இக்கடனாளி
என்னால்
கொடுப்பது
வெறும்
மயிர்    தானே !!!!!












No comments:

Post a Comment